6 வயது சிறுமியை பாழடைந்த வீட்டுக்குள் இழுத்து சென்ற 17 வயது சிறுவனை பிடித்து அடித்து நொருக்கிய மக்கள்..! பொலிஸார் கைது செய்தனர்..

ஆசிரியர் - Editor I
6 வயது சிறுமியை பாழடைந்த வீட்டுக்குள் இழுத்து சென்ற 17 வயது சிறுவனை பிடித்து அடித்து நொருக்கிய மக்கள்..! பொலிஸார் கைது செய்தனர்..

முல்லைத்தீவு - தீர்த்தக்கரை பகுதியிலிருந்து 6 வயதான சிறுமியை இழுத்துக் கொண்டு ஓடிய 17 வயதான சிறுவனை மடக்கி பிடித்த பொதுமக்கள் நையப்புடைத்த பின்னர் பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர். 

இது குறித்து மேலும் தெரியவருவதாவது. தீர்த்தக்கரையில் தனியாக நின்றிருந்த சிறுமி ஒருவரை 17 வயதுடைய சிறுவன் ஒருவர் பாழடைந்த வீடு ஒன்றுக்குள் இழுத்துச் சென்றதுடன் சிறுமியின் வாய், கை என்பவற்றையும் கட்டுவதற்கு முயற்சித்திருக்கின்றார்.

துணிந்து செயற்பட்ட குறித்த சிறுமி அங்கிருந்து அபாயக்குரல் எழுப்பியதுடன் வெளியே ஓடிவந்துள்ளார். சம்பவத்தை அவதானித்த அப்பகுதி மக்கள் சிறுவனைப் பிடித்து நையப்புடைத்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் முல்லைத்தீவுப் பொலிஸார் விசாரணை மேற்கொண்டுவருவதாக கூறப்படுகின்றது. 

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு