சுவிஸ் நாட்டில் இருந்து சில இலங்கையர்களை நாடு கடத்த திடீர் நடவடிக்கை! ஆவா குழு பின்னணிதான் காரணமாம்!! சபாஸ் சுவிஸ் அரசே !!!
வெளிநாடுகளில் தலைமறைவாக உள்ள ஆவா குழுவின் முக்கிய செயற்பாட்டாளர்கள் தொடர்பில் தமக்கு இரகசிய தகவல்கள் கிடைத்துள்ளன என யாழ் போலிஸ் நிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன.
யாழில் கடந்த காலத்தில் ஆவா குழுவின் பிரதான செயற்பாட்டாளர்களில் ஒருவரான சன்னா என அழைக்கப்படும் பிரசன்னா தற்போது சுவிஸ் நாட்டில் அகதி அந்தஸ்து கோரி இருப்பதாகவும் அவருடன் சுவிஸில் சேர்ந்தியங்கும் ஆவா குழுவுக்கு பண உதவிகளைச் செய்தும் வருகின்றனர். என இரகசிய தகவல்கள் மூலம் அறிந்துகொண்டோம்
அது தொடர்பில் நடவடிக்கைகளை மேற்கொண்டு சுவிஸில் இருந்து குறித்த நபர்களை நாடு கடத்துவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்க உள்ளோம் எனக் கூறும் இலங்கைப் போலிசார்.
அதேவேளை ஆவா குழுவின் பிரதான செயற்பாட்டாளர்களான தேவா –பிரகாஸ் மற்றும் டானியல் ஆகிய மூவர் இந்தியாவில் திருச்சிப் பகுதியில் உரிய ஆவணங்கள் எதுவுமின்றி நடமாடினார்கள் என திருச்சி கியூ பிரிவு போலிசாரினால் கைதுசெய்யப்பட்டு உள்ளனர்.
அவர்களையும் விரைவில் இலங்கைக்கு நாடு கடத்த உரிய நடவடிக்கைகளை முன்னெடுக்க உள்ளோம் என மேலும் போலிஸ் தகவல்கள் தெரிவித்தன.
சுவிஸில் இலங்கைத் தமிழரின் இவ்வாறான நடவடிக்கைகளால் அகதி தஞ்சம் கோரியவர்களின் நிலையும் சிக்கல்களை எதிர்கொள்ளலாம் எனக் கூறப்படுகிறது.