முறிகண்டி பிள்ளையார் ஆலயம் தொடர்பில் அதிகாரிகளுக்கு ஆளுநர் வழங்கியுள்ள பணிப்புரை!

ஆசிரியர் - Editor I
முறிகண்டி பிள்ளையார் ஆலயம் தொடர்பில் அதிகாரிகளுக்கு ஆளுநர் வழங்கியுள்ள பணிப்புரை!

முறிகண்டி பிள்ளையார் ஆலையத்தை சகலரும் அடையாளம் காணும் வகையில் வீதியில் பெயர் பலகை வைக்குமாறு துறைசார் அதிகாரிகளுக்கு வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா பணித்துள்ளார். 

முறிகண்டி பிள்ளையார் ஆலயத்துக்கு இவ்வாரம் விஜயம் மேற்கொண்ட வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா ஆலய சூழலை அவதானித்த நிலையில் பல்வேறு விடயங்கள் தொடர்பில் அதிகாரிகளுடன் ஆராய்ந்துள்ளார். 

ஆலயச் சூழலில் காணப்படுகின்ற பொது மலசல கூடம் தொடர்பில் வினாவிய ஆளுநர் அதன் தூய்மை தொடர்பிலும் ஆலயச் சூழலில் பூமரங்கள் நாட்டி அழகுபடுத்துமாறு புதுக்குடியிருப்பு பிரதேசசபைக்கு அறிவுரை வழங்கியுள்ளார்.

அது மட்டுமல்லாது முறிகண்டிப் பிள்ளையார் ஆலயத்தை குறிக்கும் பெயர் பலகையை ஆலயத்திலிருந்து சற்று துாரத்தில் நாட்டுமாறு வீதி அபிவிருத்தி அதிகாரசபைக்கு பணிப்புரை விடுத்துள்ளதாக அறியக் கிடைத்தது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு