காணாமற் போனவர்களுக்காக நட்டஈடு வழங்குவதற்கு 300 மில்லியன் ரூபா!

ஆசிரியர் - Admin
காணாமற் போனவர்களுக்காக நட்டஈடு வழங்குவதற்கு 300 மில்லியன் ரூபா!

பல்வேறு காரணங்களால் பல்வேறு காலப்பகுதியில் காணாமற் போனவர்களுக்காக நட்டஈடு வழங்குவதற்கு வரவு செலவுத்திட்ட நிதி ஒதுக்கீடு மேற்கொள்ளப்படுவதாக நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்தார்.

 அவ்வாறு காணாமற் போனவர்களின் குடும்பங்களுக்கு நீதியைப் பெற்றுக் கொடுப்பதற்காக ஒருக்கீடு செய்யப்பட்டுள்ள நிதி ஏற்பாட்டிற்கு மேலதிகமாக மேலும் 300 மில்லியனை ஒதுக்கீடு செய்வதற்கு முன்மொழியப்பட்டதாக அவர் தெரிவித்தார்.

 2022 ஆம் ஆண்டிற்கான சம கால அரசாங்கத்தின் வரவு செலவுத் திட்டம் நிதி அமைச்சர், பசில் ராஜபக்ஷவினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட போது அமைச்சர் இதனை தெரிவித்தார்.

 இதேவேளை, வெற்றிபெற்றவர்களினால் எதிர்த்தவர்களை துன்பத்திற்கு ஆளாக்குவது நவீன சமூகத்தில் மிகவும் வெறுக்கத்தக்க வகையில் கண்டிக்கப்பட வேண்டிய விடயமாகும்.

 ஆயினும் கடந்த ஆட்சிக் காலத்தில் இந்நாட்டில் எதிர்பரப்பு அரசியல் கருத்துடையவர்கள் மிகவும் மனிதாபிமானமற்ற வகையில் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டனர்.

 அவர்களது மனோநிலையினை எம்மால் புரிந்துகொள்ள முடியாதுள்ளது.  அக்காலப்பகுதியில் அநீதி இழைக்கப்பட்டவர்களுக்கும் பல்வேறு துன்புறுத்தல்களுக்கு ஆளாக்கப்பட்டவர்களுக்கும் நிவாரணம் வழங்குவது எமது கடப்பாடாக மாறியுள்ளது.  இவை அனைத்துக்கும் நீதியைப் பெற்றுக் கொடுப்பதற்கு ரூபா 100 மில்லியனை ஒதுக்கீடு செய்வதற்கு முன்மொழிவதாக அமைச்சர் தெரிவித்தார்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு