கதவை உடைத்து வீட்டுக்குள் நுழைந்த கொள்ளை கும்பல்! வீட்டிலிருந்தோர் மீது மூர்க்கத்தனமான தாக்குதல் நடத்தி கொள்ளை, வயோதிப பெண் படுகாயம்..

ஆசிரியர் - Editor I
கதவை உடைத்து வீட்டுக்குள் நுழைந்த கொள்ளை கும்பல்! வீட்டிலிருந்தோர் மீது மூர்க்கத்தனமான தாக்குதல் நடத்தி கொள்ளை, வயோதிப பெண் படுகாயம்..

முல்லைத்தீவு - இரணைப்பாலை பகுதியில் வீடொன்றுக்குள் நுழைந்த 8 பேர் கொண்ட கொள்ளை கும்பல் வீட்டிலிருந்தவர்கள் மீது தாக்குதல் நடத்திவிட்டு நகைகள், பொருட்களை கொள்ளையடித்துச் சென்றுள்ளது. 

குறித்த சம்பவம் நேற்று இரவு இடம்பெற்றுள்ளதாக, இன்றைய தினம் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டிருக்கின்றது. சம்பவம் தொடர்பாக மேலும் தொியவருவதாவது, நேற்றய தினம் இரவு சடுதியாக கதவை உடைத்து 4 பேர் வீட்டுக்குள் நுழைய 

அவர்களுக்கு பாதுகாப்பாக மேலும் 4 பேர் வீட்டிற்கு வெளியே நின்றுள்ளனர். வீட்டுக்குள் நுழைந்தவர்கள் வீட்டிலிருந்த வயோதிப பெண் மீதும், இளைஞன் மீதும் மூர்க்கத்தனமான தாக்குதல் நடத்தியிருக்கின்றனர். 

பின்னர் வீட்டிலிருந்து தங்க நகைகள் மற்றும் 4 தொலைபேசிகளை கொள்ளையடித்துக் கொண்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர். சம்பவத்தில் காயமடைந்த வயோதிப பெண் புதுக்குடியிருப்பு வைத்தியசாலையில் 

அனுமதிக்கப்பட்டிருக்கும் நிலையில், குறித்த சம்பவம் கிராமத்தில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளதுடன், சம்பவம் தொடர்பாக பொலிஸார் விசாரணைகளை துரிதப்படுத்தியிருப்பதாக தொியவருகின்றது. 


காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு