தொடர்ந்தும் மழை பெய்யுமாக இருந்தால் கனகாம்பிகைக்குளம் வான் பாய்வதற்கான சாத்தியங்கள்!

ஆசிரியர் - Admin
தொடர்ந்தும் மழை பெய்யுமாக இருந்தால் கனகாம்பிகைக்குளம் வான் பாய்வதற்கான சாத்தியங்கள்!

பலத்த மழை வீழ்ச்சி காரணமாக கிளிநொச்சி-கனகாம்பிகை  குளத்தின் நீர்மட்டம் தொடர்ச்சியாக அதிகரித்து வருவதனால் எந்த நேரத்திலும் வான்பாயலாம் என கிளிநொச்சி மக்களுக்கு மாவட்டச் செயலகம் அறிவித்துள்ளது.

குறித்த குளத்தின் நீர்மட்டம் 10அடி 6 அங்குலத்தை கொள்ளளவாக கொண்டது.

ஆனால் தற்போது 9 அடி 9 அங்குலமாக  நீர்மட்டம் காணப்படுகின்றதாக தெரிவிக்கப்படுகின்றது.

எதிர்வரும் நாட்களில் தொடர்ந்தும் மழை பெய்யுமாக இருந்தால் கனகாம்பிகைக்குளம் வான் பாய்வதற்கான சாத்தியங்கள் உள்ளன. எனவே மக்கள் அவதானமாக இருக்குமாறு கிளிநொச்சி மாவட்டச் செயலம் கேட்டுக்கொண்டுள்ளது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு