மாடு மேய்த்துக் கொண்டிருந்த 14 வயது சிறுவன் மின்னல் தாக்கி உயிரிழப்பு! மேலும் ஒருவர் காயம்..

ஆசிரியர் - Editor I
மாடு மேய்த்துக் கொண்டிருந்த 14 வயது சிறுவன் மின்னல் தாக்கி உயிரிழப்பு! மேலும் ஒருவர் காயம்..

மாடு மேய்த்துக் கொண்டிருந்த 14 வயதான சிறுவன் மின்னல் தாக்கி உயிரிழந்த சம்பவம் முல்லைத்தீவு - தேறாங்கண்டல் பகுதியில் கடந்த செவ்வாய் கிழமை உயிரிழந்துள்ளான். 

தேராங்கண்டல் அரசினர் தமிழ்க் கலவன் பாடசாலையில், தரம் 9இல் கல்வி பயின்ற சசிக்குமார் ஆதவன் என்ற சிறுவனே, இவ்வாறு மின்னல் தாக்கத்திற்கு உள்ளாகியுள்ளார்.குறித்த சிறுவன் தேராங்கண்டல் குளப் பகுதியில், 

நபர் ஒருவருடன் மாடு மேய்த்துக் கொண்டிருந்தபோது இந்த அனர்த்தம் நிகழ்ந்துள்ளது. மின்னல் தாக்கத்திற்க உள்ளான சிறுவனின் உடலம் மல்லாவி மருத்துவமனை கொண்டுசெல்லப்பட்டு பிரோத பரிசோதனைகளின் பின்னர் 

உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டு இறுதி நிகழ்வுகளும் நடைபெற்றுள்ளன. சிறுவனுடன் இருந்த நபர், சிறு காயங்களுக்கு உள்ளாகியுள்ளார்.

வடக்கு – கிழக்கு தமிழர் தாயகத்தில் தொடர்ந்தும் கேள்விக்குள்ளாகும் நினைவு கூறும் உரிமை !

மேலும் சங்கதிக்கு