முல்லைத்தீவில் விரைவில் பாரிய அபிவிருத்தி திட்டங்கள்

ஆசிரியர் - Admin
முல்லைத்தீவில் விரைவில் பாரிய அபிவிருத்தி திட்டங்கள்

நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி சுரேன் ராகவன் அண்மையில் முல்லைத்தீவுக்கு விஜயம் செய்து மாவட்ட செயலாளர் மற்றும் பிரதேச செயலாளர்களை சந்தித்து முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்தி தொடர்பில் கலந்துரையாடியுள்ளார்.

முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் க.விமலநாதனின் தலைமையில் மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இந்த கலந்துரையாடல் இடம்பெற்றது.

இதன்போது, அடுத்த ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் கலாநிதி சுரேன் ராகவன் ஊடாக முல்லைத்தீவு மாவட்டத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ள நிதியில் மேற்கொள்ளக்கூடிய அபிவிருத்தி திட்டங்கள் குறித்து ஆராயப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து முல்லைத்தீவில் ஊடகவியலாளரிடம் பேசிய நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி சுரேன் ராகவன் முல்லைத்தீவு மாவட்டத்தின் வட்டுவாகல் பாலம் மற்றும் கொக்கிளாய் பாலம் ஆகியன விரைவில் புனரமைப்பதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என தெரிவித்துள்ளார்.

அத்தோடு ஒட்டுசுட்டான் ஓட்டுத்தொழிற்சாலையை விரைவில் இயக்கி அதனூடாக இளைஞர் யுவதிகளுக்கு வேலைவாய்ப்புக்களை வழங்கவும் நடவடிக்கைகளை முன்னெடுத்துவருவதாக அவர் தெரிவித்தார்.

இவற்றினூடாக முல்லைத்தீவில் விரைவில் பாரிய அபிவிருத்தி திட்டங்கள் முன்னெடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு