முல்லைத்தீவு மாவட்ட ஊடக அமையம் திறந்து வைப்பு!

ஆசிரியர் - Editor I
முல்லைத்தீவு மாவட்ட ஊடக அமையம் திறந்து வைப்பு!

முல்லைத்தீவு மாவட்ட ஊடக அமைய திறப்பு விழா அமையத்தின் தலைவர் சண்முகம் தவசீலன் தலைமையில் இடம்பெற்றது.

குறித்த நிகழ்வில் யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் ஊடக கற்கைகள் தலைவர் கலாநிதி எஸ் .ரகுராம், 

முல்லைத்தீவு ஊடக அமையத்தின் பெயர்ப்பலகையை திரைநீக்கம் செய்து வைத்தார். தொடர்ந்து அலுவலக கட்டிடத்தினை 

முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் க.விமலநாதன் நாடாவை வெட்டி திறந்து வைத்தார். நிகழ்வில் யாழ்.ஊடக அமைய நிறுவுநர் தயாபரன் 

மற்றும் வடக்கு மாகாணத்தின் ஊடக அமைப்புக்களின் தலைவர்கள், ஊடகவியலாளர்கள் பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் என பலரும் கலந்துகொண்டனர்.


வடக்கு – கிழக்கு தமிழர் தாயகத்தில் தொடர்ந்தும் கேள்விக்குள்ளாகும் நினைவு கூறும் உரிமை !

மேலும் சங்கதிக்கு