படிக்க வந்த அயல்வீட்டு சிறுமி மீது துஸ்பிரயோக முயற்சி..! யாழ்.நெல்லியடியை சேர்ந்த ஓய்வுபெற்ற ஆசிரியர் கைது..

ஆசிரியர் - Editor I
படிக்க வந்த அயல்வீட்டு சிறுமி மீது துஸ்பிரயோக முயற்சி..! யாழ்.நெல்லியடியை சேர்ந்த ஓய்வுபெற்ற ஆசிரியர் கைது..

அயல் வீட்டுச் சிறுமி மீது துஸ்பிரயோக முயற்சியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 72 வயதான ஓய்வு பெற்ற பாடசாலை ஆசிரியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 

குறித்த சம்பவம் முல்லைத்தீவு - உடுப்புக்குளம் பகுதியில் இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பாக மேலும் தொியவருவதாவது, 

யாழ்.நெல்லியடியினை சேர்ந்த 72 அகவையுடைய ஓய்வு பொற்ற ஆசிரியர் ஒருவர் முல்லைத்தீவு உடுக்புக்குளம் பகுதியில் உறவினர்களின் வீட்டில் தனிமையில் வசித்து வந்துள்ளார். 

இந்நிலையில் அயல் வீட்டு உள்ள மாணவி ஒருவருக்கு பாடம் சொல்லிக்கொடுப்பாத கூறி அவர் வசித்த வீட்டிற்கு அழைத்து இன்று பாடம் சொல்லிக்கொடுத்துள்ளார். 

7 அகவையுடைய சிறுமியை இதன்போது பாலியல் துஸ்பிரயோகத்திற்கு முயற்சித்தமை உறவினர்களால் கட்டறியப்பட்டு பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளதை தொடர்ந்து 

குறித்த வயோதிபர் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன் சிறுமி மருத்துவ பரிசோதனைகளுக்காக மாவட்ட மருத்துவமனை அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. 

சம்பவம் தொடர்பில் முல்லைத்தீவு பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றார்கள். 

வடக்கு – கிழக்கு தமிழர் தாயகத்தில் தொடர்ந்தும் கேள்விக்குள்ளாகும் நினைவு கூறும் உரிமை !

மேலும் சங்கதிக்கு