புகைரத பாதை கடக்க முயன்ற கார் விபத்துக்குள்ளானது! பொலிஸ் அதிகாரி சம்பவ இடத்திலேயே பலி, ஒருவர் காயம்..

ஆசிரியர் - Editor I
புகைரத பாதை கடக்க முயன்ற கார் விபத்துக்குள்ளானது! பொலிஸ் அதிகாரி சம்பவ இடத்திலேயே பலி, ஒருவர் காயம்..

புகைரத கடவையை கடக்க முயற்சித்த கார் விபத்துக்குள்ளானதில் பொலிஸ் அதிகாரி ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதுடன், மற்றொரு பொலிஸ் உத்தியோகஸ்த்தர் படுகாயமடைந்துள்ளார். 

குறித்த விபத்து சம்பவம் நேற்று இரவு திருகோணமலை - கந்தளாய் பகுதியில் இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் மாத்தளை பகுதியைச் சேர்ந்த டி.எல் சிறிசேன 55 வயதுடைய பொலிஸ் உத்தியோகத்தரே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். 

திருகோணமலையிலிருந்து கந்தளாய்க்குச் சென்ற கார் புகையிரதக் கடவையை கடக்க முற்பட்டபோதே இவ்வாறு விபத்துக்குள்ளானதாகவும் சாரதிக்கு ஏற்பட்ட தூக்கத்தினாலே இவ்விபத்து நிகழ்ந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கந்தளாய் பொலிஸார் மேற்கொண்டு வருகிறார்கள்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு