உடல் முழுவதும் தீ காயங்களுடன் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள இளம்பெண்..!

ஆசிரியர் - Editor I
உடல் முழுவதும் தீ காயங்களுடன் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள இளம்பெண்..!

உடல் முழுவதும் கடுமையான தீ காயங்களுடன் இளம் பெண் ஒருவர் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் நிலையில் கணவனே குறித்த பெண்ணை தீ வைத்துக் கொழுத்தியதாக கூறப்படுகின்றது. 

முல்லைத்தீவு அனிஞ்சியன்குளம் பகுதியை சேர்ந்த பெண்ணே தீ காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருக்கின்றார். 

குறித்த சம்பவம் கடந்த 1ம் திகதி இடம்பெற்றதாக கூறப்படும் நிலையில் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, இரண்டரை வயது பிள்ளையின் தாயான 22 வயது பெண் கடுமையான தீக்காயங்களுக்கு உள்ளான நிலையில் 

மல்லாவி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் மேலதிக சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்திய சாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

குடும்ப தகராறு காரணமாக குறித்த பெண் தனக்கு தானே தீ மூட்டிக்கொண்டார் என கணவனின் தாயார் தெரிவிக்கின்றார். அதேவேளை அப்பெண்ணின் தாயார் குடும்ப தகராறு காரணமாக 

பெண்ணை அவரது கணவனே தீ மூட்டி படுகொலை செய்ய முயற்சித்தார் என பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். இந்நிலையில் அப்பெண்ணின் கணவனை 

மல்லாவி பொலிஸார் கைது செய்து நீதிமன்றில் முற்படுத்தியதை அடுத்து நீதிமன்ற உத்தரவில் அவர் விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு