மீண்டும் டில்லி செல்கிறது கூட்டமைப்பு!

ஆசிரியர் - Admin
மீண்டும் டில்லி செல்கிறது கூட்டமைப்பு!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரை விரைவில் மீண்டும் புதுடில்லியில் சந்திப்போம் என்று இந்திய வெளிவிவகார செயலாளர் ஹர்ஷ் வர்தன் ஷ்ரிங்லா, இரா.சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரிடம் இன்று தெரிவித்துள்ளார். 

கொழும்பிலுள்ள இந்தியத் தூதுவரின் இல்லத்தில் நடைபெற்ற சந்திப்பின் பின்னர் அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

"தங்களை விரைவில் மீண்டும் புதுடில்லியில் சந்திப்போம். அது குறித்த சந்திப்பு திகதி இந்தியத் தூதரகம் ஊடாக அறிவிக்கப்படும்" என்றும் இதன்போது அவர் மேலும் தெரிவித்தார் என்று சுமந்திரன் எம்.பி. குறிப்பிட்டுள்ளார்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு