யாழ். பல்கலைக்கழகம் முன்பாக ஆட்டோவில் வந்தவர்களால் இளைஞர் கடத்தல்!
யாழ். பல்கலைகழகத்துக்கு முன்பாக உள்ள குமாரசாமி வீதியில் இளைஞர் ஒருவர், சிவில் உடை தரித்த குழுவினால் கடத்திச் செல்லப்பட்டுள்ளாரென, அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.
குறித்த வீதி வழியாக 28 வயது மதிக்கத்தக்க இளைஞர் ஒருவர் மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்த வேளை, அவரைப் பின்தொடர்ந்து பச்சை நிற முச்சக்கர வண்டியில் வந்த மூவர் அடங்கிய சிவில் உடை தரித்தவர்கள், இளைஞனை, மோட்டார் சைக்கிளில் இருந்து தள்ளி விழுத்தி, பின் புறமாகக் கைவிலங்கிட்டு, முச்சக்கர வண்டியில் ஏற்றிச் சென்றதாக, அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பில் யாழ்.பொலிஸார் மற்றும் கோப்பாய் பொலிஸ் நிலையங்களைத் தொடர்புகொண்டு கேட்ட போது, தாம் அவ்வாறு யாரையும் கைது செய்யவில்லை எனத் தெரிவித்தனர்.