ஆபத்தான நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட இளைஞன்! கட்டுப்பாடற்ற வேகம், பனை வடலியுடன் மோதி கோர விபத்து..

ஆசிரியர் - Editor I
ஆபத்தான நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட இளைஞன்! கட்டுப்பாடற்ற வேகம், பனை வடலியுடன் மோதி கோர விபத்து..

முல்லைத்தீவு - நாயாறு பகுதியில் கட்டுப்பாடற்ற வேகத்தினால் மோட்டார் சைக்கிள் விபத்துக்குள்ளானதில் இளைஞன் ஒருவன் ஆபத்தான நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

சம்பவத்தில் நாயாறு பகுதியை சேர்ந்த 23 வயதான ஏ.கதீஸ்கரன் என்ற இளைஞனே படுகாயமடைந்து ஆபத்தான நிலையில் உள்ளார். செம்மலையிலிருந்து நாயாறு நோக்கி சென்றுகொண்டிருந்தபோது கட்டுப்பாட்டை இழந்த 

மோட்டார் சைக்கிள் வீதி ஓரத்திலிருந்த பனை வடலியுடன் மோதி விபத்துக்குள்ளானது. இதன்போது கழுத்தில் படுகாயமடைந்த இளைஞன் முல்லைத்தீவு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் 

அனுமதிக்கப்பட்டிருப்பதாக தொியவருகின்றது. 

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு