தந்தையால் கொடுராமாக தாக்கப்பட்ட சிறுவன் வைத்தியசாலையில்...

ஆசிரியர் - Editor I
தந்தையால் கொடுராமாக தாக்கப்பட்ட சிறுவன் வைத்தியசாலையில்...

மாங்குளம் நீதிபுரம் பகுதியில் தந்தையின் கோரத் தாக்குதலால் இரு கால்களும் முறிந்த நிலையில் சிறுவன் ஒருவன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளான்.

முல்லைத்தீவு மாவட்டம் நீதிபுரத்தைச் சேர்ந்த 11 அகவையுடைய கோபாலகிருஸ்ணன் - இசைப்பிரியன் என்ற சிறுவனே இவ்வாறு பாதிக்கப்பட்ட நிலையில் வைத்தியசாலையில் இனுமதிக்கப்பட்டுள்ளான்.

குறித்த விடயம் தொடர்பில் மேலும் தெரிய வருவது ,

11 வயதுச் சிறுவன் ஒருவனை தந்தை பலமாகத் தாக்கியுள்ளார். இவ்வாறு தாக்குதலிற்கு இலக்கான நிலையில் இரு கால்கள் மற்றும் உடல் பகுதியிலும் காயங்களுடன் மாங்குளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

இவ்வாறு அனுமதிக்கப்பட்ட சிறுவனின் இரு கால்களும் முறிவடைந்த நிலையில் கானப்பட்டதனால் மாங்குளம் வைத்தியசாலையில் இருந்து நோயாளர் காவு வண்டி மூலம் உடனடியாக வவுனியா மாவட்ட வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.

இதேநேரம் குறித்த தந்தை இதற்கு முன்பும் குடும்ப வன்முறையில் ஈடுபட்டு சிறை சென்றவர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு