ஊரடங்கு சட்டம் நீக்கப்படவுள்ளது..! புதிய கட்டுப்பாடு அமுலாகும் சாத்தியம், இராணுவ தளபதி வெளியிட்டிருக்கும் அறிவிப்பு..

ஆசிரியர் - Editor I
ஊரடங்கு சட்டம் நீக்கப்படவுள்ளது..! புதிய கட்டுப்பாடு அமுலாகும் சாத்தியம், இராணுவ தளபதி வெளியிட்டிருக்கும் அறிவிப்பு..

நாடு முழுவதும் தற்போது அமுலில் உள்ள ஊரடங்கு சட்டம் நீக்கப்பட்டு விரைவில் நாடு வழமைக்கு திரும்பும் வாய்ப்புள்ளதாக கூறியிருக்கும் இராணுவ தளபதியும், தேசிய கொவிட் தடுப்பு செயலணியின் தலைவருமான ஜெனரல் சவேந்திர சில்வா, 

அடுத்த வாரம் நாடு மீண்டும் திறக்கப்பட்டால் விதிக்கப்பட வேண்டிய கட்டுப்பாடுகள் குறித்து தெரியப்படுத்துமாறும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ கொரோனா ஒழிப்பு செயலணிக்கு அறிவுத்தியுள்ளதாகவும் தெரிவித்தார்.

எனவே, அடுத்த வாரத்திலிருந்து புதிய கட்டுப்பாடுகளை விதிக்கவுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். அத்தோடு புதிய கட்டுப்பாடுகளுடன் நாட்டை திறக்க எதிர்பார்ப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்ற கொரோனா ஒழிப்பு செயலணிக் கூட்டத்தின்போது இந்த அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.கொரோனா வைரஸின் டெல்ட்டா திரிபின் பரவல் காரணமாக கடந்த மாதம் 20 ஆம் திகதி முதல் அமுல்படுத்தப்பட்ட ஊரடங்கு உத்தரவு 

பலமுறை நீடிக்கப்பட்டு செப்டெம்பர் 21ஆம் திகதி அதிகாலை 4.00 மணிவரை அமுல்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு