ஊரடங்குச் சட்டம் திங்கள் கிழமைக்கு பின்னர் நீடிக்கப்போவதில்லை..! கொவிட் தடுப்புக்கான இராஜாங்க அமைச்சர் விடுத்துள்ள அறிவிப்பு..

ஆசிரியர் - Editor I
ஊரடங்குச் சட்டம் திங்கள் கிழமைக்கு பின்னர் நீடிக்கப்போவதில்லை..! கொவிட் தடுப்புக்கான இராஜாங்க அமைச்சர் விடுத்துள்ள அறிவிப்பு..

நாட்டில் தற்போது அமுலில் உள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டத்தை நீடிக்கும் சாத்தியமில்லை. என கூறியிருக்கும் கொவிட் தடுப்புக்கான இராஜாங்க அமைச்சர் சுதர்ஷினி பெர்னாண்டோபுள்ளே கூறியிருக்கின்றார். 

கடந்த 4 வாரங்களாக நாட்டில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டதன் காரணமாக கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கையில் குறிப்பிடத்தக்க வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. மரணங்களின் எண்ணிக்கையும் குறைவடைந்துள்ளது.

அடுத்த வாரம் முதல் நாட்டை மட்டுப்படுத்தப்பட்ட அளவில் திறந்து பொருளாதாரத்தினை வலுப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். தடுப்பூசி வழங்கல் மற்றும் சுகாதார நடைமுறைகளுக்கு அமைய அந்த செயற்பாடுகள் முன்னெடுக்கப்படும் 

எனவும் இராஜாங்க அமைச்சர் சுதர்ஷினி பெர்னாண்டோபுள்ளே குறிப்பிட்டுள்ளார்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு