வடபிராந்திய பஸ் ஊழியர்களின் போராட்டம் கைவிடப்பட்டது..!!
வடபிராந்திய பஸ் ஊழியர்களின் போராட்டம் இன்று (30) நண்பகல் கைவிடப்பட்டது.
“இலங்கைப் போக்குவரத்துச் சபையின் வடபிராந்திய பிரதான முகாமையாளர் உபாலி கிரிவத்துடுவவை அந்தப் பதவியிலிருந்து உடனடியாக இடமாற்றப்படுவார். வடபிராந்திய பிரதான முகாமையாளராக கேதீஸ் நியமிக்கப்படுவார்” என இலங்கைப் போக்குவரத்துச் சபையின் தலைமையகம் இன்று (30) நண்பகல் வாக்குறுதி வழங்கியது.
இதையடுத்தே, வடபிராந்திய போக்குவரத்துச் சபை ஊழியர்கள் முன்னெடுத்து வந்த பணிப்புறக்கணிப்புப் போராட்டம் கைவிடப்பட்டது.