வடக்கில் ஒரு நாளில் 459 கொரோனா தொற்றாளர்கள், 8 கொரோனா மரணங்கள் பதிவு..! யாழ்ப்பாணம், வவுனியா மாவட்டங்களில் அதிக பாதிப்பு..

ஆசிரியர் - Editor I
வடக்கில் ஒரு நாளில் 459 கொரோனா தொற்றாளர்கள், 8 கொரோனா மரணங்கள் பதிவு..! யாழ்ப்பாணம், வவுனியா மாவட்டங்களில் அதிக பாதிப்பு..

வடமாகாணத்தில் ஒரு நாளில் நேற்று மட்டும் சுமார் 459 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் 8 கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளதாக சுகாதார பிரிவு தகவல்கள் தொிவிக்கின்றன. 

இதன்மூலம் செப்டெம்பர் மாதத்தின் முதல் 8 நாட்களில் வடக்கு மாகாணத்தில் 4,546 கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டதுடன் 121 பேர் உயிரிழந்துள்ளனர். சுகாதாரத் துறையின் இன்றைய அறிக்கையின் படி, 

நேற்றைய தினம் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 178 கொரோனா நோயாளர்களும் வவுனியா மாவட்டத்தில் 121 கொரோனா நோயாளர்களும் கிளிநொச்சி மாவட்டத்தில் 77 கொரோனா நோயாளர்களும் முல்லைத்தீவில் 57 கொரோனா நோயாளர்களும் 

மன்னாரில் 27 கொரோனா நோயாளர்களும் அடையாளம் காணப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 4 பேரும் மன்னார் மாவட்டத்தில் 2 பேரும் வவுனியா மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் தலா ஒருவரும் கொரோனா நோயால் உயிரிழந்துள்ளனர்.

2020 மார்ச் தொடக்கம் நேற்றுவரை வடக்கு மாகாணத்தில் 31,375 கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் 530 பேர் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளனர். அதிகப்படியாக யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 14,651 கொரோனா நோயாளர்கள் 

அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் 311 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு