கர்ப்பம் தரிப்பதை ஒரு வருடத்திற்கேனும் பிற்போடுமாறு சுகாதார மேம்பாட்டு பணியகம் கோருவது ஏன்? வைத்திய நிபுணர் ஹர்ஷ அத்தப்பத்து விளக்கம்..

ஆசிரியர் - Editor I
கர்ப்பம் தரிப்பதை ஒரு வருடத்திற்கேனும் பிற்போடுமாறு சுகாதார மேம்பாட்டு பணியகம் கோருவது ஏன்? வைத்திய நிபுணர் ஹர்ஷ அத்தப்பத்து விளக்கம்..

நாட்டின் தற்போதைய நிலையினை கருத்தில் கொண்டு ஏற்கனவே குழந்தைகளையுடைய தாய்மார் கர்ப்பம் தரித்தலை ஒரு வருடத்திற்கேனும் பிற்போட வேண்டும் என்று அறிவுறுத்துவதாகவும் விசேட வைத்திய நிபுணர் ஹர்ஷ அத்தபத்து தெரிவித்தார்.

சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் இன்று புதன்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில், இன்றைய சூழலில் கர்ப்பிணிகள் கொவிட் தொற்றுக்கு உள்ளாகுதல் பாரிய அபாயத்தை ஏற்படுத்தும். 

எனவே ஏற்கனவே குழந்தைகளை உடையவர்கள் சிந்தித்து கர்ப்பம் தரித்தலை பிற்போடுமாறு அறிவுறுத்துகின்றோம்.காரணம் தடுப்பூசிகளை ஏற்றி சுகாதார பாதுகாப்பு விதிமுறைகளைப் பின்பற்றுகின்ற போதிலும் கொவிட் தொற்றுக்கு உள்ளாகக் கூடிய வாய்ப்புக்கள் 

சகலருக்கும் காணப்படுகிறது. எனவே நிகழ்காலத்தை விட சிறந்த எதிர்காலம் உருவாகும் என்ற நம்பிக்கையுடனேயே இந்த அறிவுரையை முன்வைக்கின்றோம் என்றார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு