குமரிக் கடலில் உருவானது ஒகி புயல் ! வீட்டைவிட்டு வெளியில் வரவேண்டாம் என எச்சரிக்கை!!

ஆசிரியர் - Editor II
குமரிக் கடலில் உருவானது ஒகி புயல் ! வீட்டைவிட்டு வெளியில் வரவேண்டாம் என எச்சரிக்கை!!

தென்மேற்கு வங்கக்கடலில் இலங்கை அருகே 2 நாட்களுக்கு முன்னர் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவானது. இதன் காரணமாக கடலோர மாவட்டங்களில் பரவலாக மழை பெய்தது. குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி தீவிரம் அடைந்து தெற்கு மற்றும் தென் கிழக்கு திசையில் குமரிக் கடல் நோக்கி நகர்ந்தது.

அது மேலும் தீவிரம் அடைந்து காற்றழுத்த மண்டலமாகி தற்போது புயலாக உருவெடுத்துள்ளது. குமரியில் இருந்து 60 கி.மீற்றர் நிலை கொண்டுள்ள இந்த புயலுக்கு ‘ஒகி’ என்ற பெயரிடப்பட்டுள்ளது.

இந்தப் புயலினால் மணிக்கு 65 முதல் 80 கி.மீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

குமரி மாவட்டத்தில் சூறைக் காற்றுடன் மழைபெய்து வருவதால் மக்கள்; வீட்டைவிட்டு வெளியே வரவேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கன்னியாகுமரி-நெல்லை-தூத்துக்குடி- ராமநாதபுரம்- புதுக்கோட்டை- திருச்சி ஆகிய 6 மாவட்டங்களில் அடுத்த 36 மணிநேரத்துக்கு மிகப் பலத்த மழைபெய்யும் என்று வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

கன்னியாகுமரி-நெல்லை-தூத்துக்குடி- ராமநாதபுரம்- புதுக்கோட்டை ஆகிய 5 மாவட்ட மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லவேண்டாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து இந்த புயலானது வடமேற்கு திசையை நோக்கி நகர்ந்து லட்சதீவுப் பகுதியை நோக்கிச் செல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு