யாழில் ஹெரோயின் போதைப்பொருளுடன் இருவர் கைது

ஆசிரியர் - Admin
யாழில் ஹெரோயின் போதைப்பொருளுடன் இருவர் கைது

690 மில்லிக்கிராம் ஹெரோயின் போதைப் பொருளை வியாபார நோக்கத்துக்காக வைத்திருந்தனர் என்ற குற்றச்சாட்டில் இருவர் யாழ்ப்பாணம் திருநகர் பகுதியில் வைத்து இன்று கைது செய்யப்பட்டதாக யாழ்ப்பாணம் பொலிஸார் தெரிவித்தனர்.

திருநகர் பகுதியைச் சேர்ந்த 27, 33 வயதுடைய இருவரே கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் உயிர்க் கொல்லி போதைப்பொருளான ஹெரோயின் பக்கற்றுக்கள் இரண்டு கைப்பற்றப்பட்டன.

690 கிராம் எடையுள்ள அவற்றின் பெறுமதி 10 இலட்சம் ரூபா ஆகும்.

விசாரணைகளின் பின்னர் சந்தேகநபர்கள் இருவரும் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் இன்று முற்படுத்தப்படுவர்” என்று பொலிஸார் மேலும் கூறினர்

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு