ஊரடங்கு அமுலில் உள்ளபோது வேலைக்கு செல்வோருக்கு இராணுவ தளபதி வெளியிட்டுள்ள அறிவிப்பு..!

ஆசிரியர் - Editor I
ஊரடங்கு அமுலில் உள்ளபோது வேலைக்கு செல்வோருக்கு இராணுவ தளபதி வெளியிட்டுள்ள அறிவிப்பு..!

நாடு முழுவதும் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டிருக்கும் நிலையில் வேலைக்கு செல்வோர் விசேடமான அனுமதிகள் எதனையும் பெறவேண்டியதில்லை. என இராணுவ தளபதியும், தேசிய கொவிட் தடுப்பு செயலணியின் தலைவருமான ஜெனரல் சவேந்திர சில்வா கூறியுள்ளார். 

நாடு முழுவதும் நேற்றிரவு 10.00 மணி முதல் 30ஆம் திகதி அதிகாலை 4.00 மணி வரை ஊரடங்கு உத்தரவு அமுல்படுத்தப்படும் என இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார். இக்காலகட்டத்தில் அத்தியாவசிய சேவைகள், 

ஆடைத் தொழில்கள், விவசாய நடவடிக்கைகள் மற்றும் மருந்தகங்களின் செயற்பாடுகள் அனுமதிக்கப்படும் என்றும் அவர் கூறினார். தொழிலுக்குச் செல்பவர்கள் விஷேட அனுமதி பெறத் தேவையில்லை என்றும் வீதித்தடைகளில் உள்ள பொலிஸார் 

மற்றும் இராணுவத்தினரிடம் உங்களது அடையாள அட்டையைக் காட்டி அனுமதி பெற முடியும் என்றும் அவர் கூறினார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு