அரியாலை துப்பாக்கிசூட்டு சம்பவம் கைதான அதிரடிப்படை வீரர்களின் விளக்கமறில் நீடிப்பு
யாழ். அரியாலை பகுதியில் இளைஞரொருவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சிறப்பு அதிரடிப்படை உத்தியோகத்தர்களின் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.
குறித்த இருவரையும் எதிர்வரும் டிசம்பர் மாதம் 14 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு யாழ்ப்பாண நீதிமன்ற நீதிவான் சின்னத்துரை சதீஸ்தரன் இன்று உத்தரவிட்டாா்.
கடந்த மாதம் 22ஆம் திகதி அரியாலை கிழக்கு மணியம்தோட்டம் வசந்தபுரம் முதலாம் குறுக்கு வீதிப் பகுதியில் 24 வயதுடைய டொன்பொஸ்கோ டினேசன் என்பவர் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்தார்.
இந்தக் கொலைச் சம்பவத்தில் சிறப்பு அதிரடிப்படையின் புலனாய்வு அதிகாரி உள்பட இருவரை சந்தேகத்தின் பேரில் கைது செய்து, நீதிமன்ற கட்டளையின் பிரகாரம் விளக்கமறியலில் வைக்கப்பட்டனா்.