நாட்டை முடக்கும் அறிவிப்பு இரு நாட்களுக்குள் வெளியாகவேண்டும்! தொழிற்சங்கங்கள் எச்சரிக்கை, நெருக்கடிக்குள் அரசு..

ஆசிரியர் - Editor I
நாட்டை முடக்கும் அறிவிப்பு இரு நாட்களுக்குள் வெளியாகவேண்டும்! தொழிற்சங்கங்கள் எச்சரிக்கை, நெருக்கடிக்குள் அரசு..

நாளை மறுதினம் வெள்ளிக்கிழமைக்குள் நாட்டை முடக்கும் தீர்மானத்தை எடுக்காவிட்டால் தொழிற்சங்கங்கள் ஊடாக நாட்டை முடுக்குவதற்கான நடவடிக்கை முன்னெடுக்கப்படும் என தேசிய தொழிற்சங்க மையத்தின் அமைச்சானர் வசந்த சமரசிங்க கூறியுள்ளார். 

அரச மற்றும் தனியார்த்துறை பிரிவுகளை உள்ளடக்கிய தொழிற்சங்கங்களின் பங்கேற்புடன் நேற்று  கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். மக்களின் பாதுகாப்பு தொடர்பில் சிந்திக்காது அரசாங்கம் செயற்பட்டு வருகின்றது.

எனவே அனைத்து தொழிற்சங்கங்களும் இணைந்து குறித்த நடவடிக்கையினை எடுக்கவுள்ளதாக தேசிய தொழிற்சங்க மையத்தின் தேசிய அமைப்பாளர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு