நாட்டு மக்களுக்கு இராணுவ தளபதி விடுத்துள்ள அறிவித்தல்! அடுத்துவரும் நாட்களில் மிக..மிக அவதானம்..

ஆசிரியர் - Editor I
நாட்டு மக்களுக்கு இராணுவ தளபதி விடுத்துள்ள அறிவித்தல்! அடுத்துவரும் நாட்களில் மிக..மிக அவதானம்..

அடுத்துவரும் நாட்கள் மிக முக்கியமானவை என குறிப்பிட்டிருக்கும் இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா, மக்கள் முடிந்தவரை தமது வீடுகளிலேயே இருக்கவேண்டும். எனவும் கோரிக்கை விடுத்திருக்கின்றார். 

இது குறித்து மேலும் அவர் கூறியுள்ளதாவது, பொதுமக்கள் மிகவும் கவனமாக செயற்பட வேண்டும். தேவையில்லாமல் வீட்டை விட்டு வெளியேற வேண்டாம். இது மிகவும் கவனமாக இருக்க வேண்டிய நேரம், 

பணியிடங்களிலுள்ள ஊழியர்களின் எண்ணிக்கையைக் குறைப்பதற்காக, அத்தியாவசிய ஊழியர்களை வரவழைக்க மட்டுமே பொது நிறுவனங்களின் தலைவர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு