பாடசாலைகள் திறக்கப்படும் அறிவிப்பில் மீண்டும் மாற்றம்! கல்வியமைச்சர் விடுத்துள்ள அறிவிப்பு..

ஆசிரியர் - Editor I
பாடசாலைகள் திறக்கப்படும் அறிவிப்பில் மீண்டும் மாற்றம்! கல்வியமைச்சர் விடுத்துள்ள அறிவிப்பு..

நாட்டில் தற்போதுள்ள சூழலில் பாடசாலைகளை செப்ரெம்பர் மாதத்தின் முதல் வாரத்தில் திறப்பது சாத்தியமற்றது. என கல்வி அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் கூறியுள்ளார். 

கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகச் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரவித்தார்.

பெரும்பாலான கல்விசார் ஊழியர்களுக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டிருந்தாலும், மாணவர்களின் பாதுகாப்பை உறுதிசெய்யும் வரை

 பாடசாலைகளை திறக்க முடியாது எனவும் அவர் குறிப்பிட்டார். அத்தோடு, பாடசாலைகளை மீளத் திறப்பது தொடர்பில் 

தற்போது சுகாதார பிரிவினருடன் ஆலோசனை நடத்தப்பட்டு வருவதாகவும், அவர்களின் அனுமதி கிடைத்தவுடன் 

பாடசாலைகள் மீளத் திறக்கப்படும் எனவும் கல்வியமைச்சர் இதன்போது தெரிவித்தார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு