அதிபர், ஆசிரியர்களை பணிக்கு அழைப்பது தொடர்பில் கல்வி அமைச்சின் செயலாளர் கடிதம்!

ஆசிரியர் - Editor I
அதிபர், ஆசிரியர்களை பணிக்கு அழைப்பது தொடர்பில் கல்வி அமைச்சின் செயலாளர் கடிதம்!

அதிபர், ஆசிரியர்களை மீளவும் சேவைக்கு அழைப்பதற்கு எடுக்கப்பட்ட முந்தைய தீர்மானத்தில் மாற்றம் செய்யப்பட்டு கல்வி அமைச்சின் செயலாளர் கடிதம் மூலம் அறிவித்தல் வழங்கியிருக்கின்றார். 

இதன்படி கொரோனா தொற்று வேகமாக பரவிவரும் நிலையில் அவர்களை மீண்டும் சேவைக்கு அழைக்க வேண்டிய அவசியமில்லை என்பதால் கல்விசார் ஊழியர்கள் வீட்டிலிருந்து பணியாற்றலாம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் இவ்வாறு வீட்டிலிருந்து கடமையாற்றும் காலத்தில் ஒன்லைன் முறை அல்லது பிற மாற்று முறைகளைப் பயன்படுத்தி கற்பித்தல் செயற்பாட்டை முன்னெடுக்க வேண்டும் என கல்வி அமைச்சின் செயலாளர் குறிப்பிட்டார்.

இருப்பினும், தங்கள் சம்பளப் பிரச்சனைகள் தீர்க்கப்படும் வரை வேலைநிறுத்தம் தொடரும் என குறித்த சங்கங்கள் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு