நாட்டு மக்களிடம் இராணுவ தளபதி விடுத்துள்ள கோரிக்கை, வதந்திகளை நம்பாதீர்கள்..!

ஆசிரியர் - Editor I
நாட்டு மக்களிடம் இராணுவ தளபதி விடுத்துள்ள கோரிக்கை, வதந்திகளை நம்பாதீர்கள்..!

மிக பொய்யான பேச்சுக்களை நம்பாமல் மக்கள் விரைவாக தடுப்பூசியை செலுத்திக் கொள்ளுமாறு இராணுவ தளபதியும், தேசிய கொவிட் தடுப்பு செயலணியின் தலைவருமான ஜெனரல் சவேந்திர சில்வா கூறியுள்ளார். 

மேலும் சுகாதார வழிமுறைகளை முறையாகக் கடைப்பிடிக்க வேண்டும். விசேடமாக சகல சந்தர்ப்பங்களிலும் முகக் கவசம் அணிதல் அவசியம் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அரசாங்கம் தடுப்பூசி ஏற்றும் வேலைத்திட்டத்தை விரைவு படுத்தியிருக்கிறது. மக்களுக்குத் தேவையான தடுப்பூசிகளைத் தருவிப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அவர் கூறினார்.

நாட்டில் 75 வீதமானோர் தடுப்பூசியின் ஒரு செலுத்துகையை பெற்றுக்கொண்டிருப்பதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா குறிப்பிட்டுள்ளார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு