பொதுச் சேவையில் உள்ள கர்ப்பவதி பெண்களுக்கு மகிழ்ச்சியான செய்தி! பாதுகாப்பை உறுதிப்படுத்த அரசு நடவடிக்கை..

ஆசிரியர் - Editor I
பொதுச் சேவையில் உள்ள கர்ப்பவதி பெண்களுக்கு மகிழ்ச்சியான செய்தி! பாதுகாப்பை உறுதிப்படுத்த அரசு நடவடிக்கை..

பொதுச் சேவையில் உள்ள கர்ப்பவதி பெண்கள் தங்கள் கடமையை வீட்டிலிருந்து செய்வதற்கான சுற்றறிக்கை ஒன்றை வெளியிட நடவடிக்கை எடுக்கப்படுவதாக பேராசிரியர் சன்ன ஜயசுமண தொிவித்திருக்கின்றார். 

நாடாளுமன்றில் குறித்த விடயத்தை அவர் தொிவித்திருக்கின்றார். பொது நிர்வாக அமைச்சால் இது அங்கீகரிக்கப்பட்டுள்ள தாகவும் அமைச்சர் கூறினார். 

நேற்று காலை நிதியமைச்சருடன் நடைபெற்ற கலந்துரையாடலில் பொது நிர்வாக சேவையில் வாரம் ஒன்றில் இரு ஷிப்ட்களுக்கு சேவை செய்யும் 

ஒரு புதிய முறையை அறிமுகப்படுத்த ஒப்புக்கொள்ளப்பட்டதாக அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜெயசுமண கூறினார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு