நாட்டில் மீண்டும் பயணத்தடை மற்றும் கட்டுப்பாடு! வெள்ளிக்கிழமை உயர்மட்ட கூட்டம், எல்லை மீறிய தொற்று..

ஆசிரியர் - Editor I
நாட்டில் மீண்டும் பயணத்தடை மற்றும் கட்டுப்பாடு! வெள்ளிக்கிழமை உயர்மட்ட கூட்டம், எல்லை மீறிய தொற்று..

நாட்டில் கொரோனா வைரஸ் பரவல் மற்றும் டெல்டா திரிபு வைரஸ் பரவல் அதிகரித்துள்ள நிலையில் வார இறுதியில் பயணத்தடை அல்லது குறுகியகால முடக்கம் ஒன்றை அமுல்படுத்த அரசு ஆராய்ந்து வருகின்றது. 

இது குறித்து எதிர்வரும் வெள்ளிக்கிழமை கொரோனா தடுப்பு செயலணியின் விசேட கூட்டமொன்று நடைபெறவுள்ளது. இந்த கூட்டத்திற்கு விசேட மருத்துவ நிபுணர்கள் பலர் அழைக்கப்பட்டுள்ளனர்.

இங்கு கிடைக்கப்பெறும் ஆலோசனைகள் ,தகவல்களை அடிப்படையாக கொண்டு புதிய சுகாதார கட்டுப்பாடுகளை விதிக்க அரசு உத்தேசித்துள்ளது.முதற்கட்டமாக, திருமண நிகழ்வுகள் , வைபவங்கள் 

மற்றும் கூட்டங்களை தற்காலிகமாக இடைநிறுத்துவது குறித்து ஆலோசிக்கப்படுமென தெரிகிறது. நாட்டின் அனைத்து வைத்தியசாலைகளும் கொரோனா நோயாளர்களால் நிரம்பியுள்ளதால் 

தொற்றுப் பரவலை கட்டுப்படுத்த அரசு விரைவு முடிவுகளை எடுக்கும் நிலைமை ஏற்பட்டுள்ளதாக அமைச்சர் ஒருவர் தெரிவித்தார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு