மருத்துவமனை நடைபாதையில் படுத்திருக்கும் நோயாளிகள்! மோசமாகும் நிலமை..

ஆசிரியர் - Editor I
மருத்துவமனை நடைபாதையில் படுத்திருக்கும் நோயாளிகள்! மோசமாகும் நிலமை..

கொரோனா தொற்றாளர்கள் எண்ணிக்கை அதிகரிப்பினால் மருத்துவமனைகளில் நோயாளர்கள் படுக்க இடமில்லாமல் பெரும் அசௌகரியங்களை எதிர்கொள்ளும் நிலையை காண்பிக்கும் காணொளியை ஆங்கில ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ளது.

குறித்த காணொளி காட்சியில் நோயாளிகள் மருத்துவமனையின் நடைபாதையில் பாய்களில் தூங்குவதை காணக்கூடியதாக உள்ளது. தினசரி அதிகரித்து வரும் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை காரணமாக 

மருத்துவமனை திறன் இல்லாமல் போகிறது என்றும் எச்சரித்துள்ளது.COVID-19 குறித்த சுகாதார வழிகாட்டுதல்களை கண்டிப்பாக கடைபிடிக்குமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

இதற்கிடையில், இலங்கையின் பல மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சை பிரிவுகள் (ஐசியு) தற்போது கோவிட் நோயாளிகளால் நிரம்பி இருப்பதாக பிபிசி சிங்கள சேவை தெரிவித்துள்ளது.

தற்போதைய நிலைமையை கருத்தில் கொண்டு இரத்தினபுரி போதனா மருத்துவமனை உள்ளிட்ட நாட்டில் இரு மருத்துவமனைகள் அவசர நிலையை பிரகடனப்படுத்தியிருக்கின்றன. 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு