முல்லைத்தீவு - நந்திக்கடல் பகுதியில் இருந்து அகற்றப்பட்ட இராணுவ கண்காணிப்பு முகாம்

முல்லைத்தீவு - நந்திக்கடல் பகுதியில் உள்ள இராணுவ கண்காணிப்பு முகாம் அகற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2009ஆம் ஆண்டு இறுதி யுத்தத்தின் போது வட்டுவாகல் பகுதியை கைப்பற்றிய இராணுவத்தினர் முல்லைத்தீவு-பரந்தன் பிரதான வீதிப் போக்குவரத்தை கண்காணிப்பதற்காக குறித்த முகாமை நந்திக்கடல் பகுதியில் அமைத்துள்ளனர்.
இந்த நிலையில், 9 வருடங்களின் பின்னர் இந்த கண்காணிப்பு முகாம் இராணுவத்தினரால் இன்று அகற்றப்பட்டுள்ளதாக அந்தப் பகுதி மக்கள் தகவல் வெளியிட்டுள்ளனர்.