வாள்வெட்டு குழு உறுப்பினர்கள் 6 பேர் வாள் மற்றும் கைகுண்டுடன் கைது.

ஆசிரியர் - Editor I
வாள்வெட்டு குழு உறுப்பினர்கள் 6 பேர் வாள் மற்றும் கைகுண்டுடன் கைது.

யாழ்.மாவட்டத்தில் பல்வேறு வாள்வெட்டு சம்பவங்களுடன் தொடர்புடைய 6 பேர் யாழ். பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து 6 வாள்கள் மற்றும் 3 கோடாரிகள் மற்றும் ஒரு கைக்குண்டு, ஒரு முகமூடி ஆகியன மீட்கப்பட்டுள்ளதாக யாழ்.பொலிஸார் கூறியுள்ளனர்.

பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவல் ஒன்றின் அடிப்படையிலேயே பொலிஸார் கை து செய்துள்ளனர். கைத செய்யப்பட்டவர்களில் 2 பேர் பரந்தன் பகுதியில் வைத்தும், 3 பேர் கொழும்பில் வைத்தும், ஒருவர் வவுனியாவில் வைத்தும் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.

கைது செய்யப்பட்டவர்களிடம் நடத்தப்பட்டட விசாரணைகளினடிப்படையில் 6 வாள்கள், 3 கோடாரிகள், மற்றும் ஒரு கைக்குண்டு ஆகியன மீட்கப்பட்டுள்ளது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு