கட்டாரில் இருந்து நாடு திரும்பியவர் கட்டுநாயக்கவில் கைது!

ஆசிரியர் - Admin
கட்டாரில் இருந்து நாடு திரும்பியவர் கட்டுநாயக்கவில் கைது!

விடுதலைப் புலிகளை ஊக்குவித்த சந்தேகத்தின் பேரில் கட்டாரில் இருந்து நாடு கடத்தப்பட்டவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

கைது செய்யப்பட்ட நபர் முல்லைத்தீவுக்கு 14 நாட்கள் தனிமைப்படுத்தலுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். 

குறித்த நபர் பயங்கரவாத விசாரணைப் பிரிவினரால் நேற்று விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ள நபர் 41 வயதான திருகோணமலை பகுதியில் வசிப்பவர் என கூறப்படுகிறது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு