கணவர் வெளிநாட்டில், தவறான உறவால் பிறந்த குழந்தையை எரித்து கொன்ற தாய்!

ஆசிரியர் - Editor I
கணவர் வெளிநாட்டில், தவறான உறவால் பிறந்த குழந்தையை எரித்து கொன்ற தாய்!

பெற்ற குழந்தையை எரித்துக் கொன்ற குற்றச்சாட்டியல் தாய் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர். 

குறித்த சம்பவம் திருகோணமலை கந்தளாய் – பேராறு – மத்ரஸா நகரைச் சேர்ந்த 35 வயதான மூன்று பிள்ளைகளின் தாயொருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார் 

அந்தப் பெண்ணின் கணவர் நீண்டகாலமாக வெளிநாட்டில் வசிக்கும் நிலையில் இவர் குழந்தை ஒன்றைப் பெற்றெடுத்துள்ளார். 

இதையடுத்து தனக்கு பிறந்த சிசுவை எரித்துக் கொன்று அதன் உடலை பற்றைக்குள் எறிந்துள்ளார். 

தெரு நாய்கள் அந்த உடலை வீதியில் கௌவிச் சென்ற நிலையில், இதை அவதானித்த அயலவர்கள் பொலிஸாருக்கு வழங்கிய தகவலின் அடிப்படையில் 

விசாரணை நடத்திய பொலிஸார் சிசுவை பிரசவித்த தாயாரைக் கைது செய்துள்ளனர்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு