தடுப்பூசி பெறுவதில் பல அசௌகரியங்களை சந்திக்கும் யாழ்.மாவட்ட ஆசிரியர்கள்! முறையான திட்டமிடல் இல்லை என குற்றச்சாட்டு..

ஆசிரியர் - Editor I
தடுப்பூசி பெறுவதில் பல அசௌகரியங்களை சந்திக்கும் யாழ்.மாவட்ட ஆசிரியர்கள்! முறையான திட்டமிடல் இல்லை என குற்றச்சாட்டு..

பாடசாலை ஆசிரியர்களுக்கான தடுப்பூசி வழங்கும் நடவடிக்கையில் சரியான திட்டமிடல் இல்லாமையால் ஆசிரியர்கள் பெரும் அலைச்சலை சந்தித்துள்ளனர். 

ஒவ்வொரு கோட்டத்திலும் ஒவ்வொரு பாடசாலை தெரிவு செய்யப்பட்டு அந்தக் கோட்டத்துக்கு உட்பட்ட பாடசாலைகளில் கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு தடுப்பூசி ஏற்றப்பட்டு வருகின்றது. 

யாழ்ப்பாண மாவட்டத்தில் வசிக்கும் ஆசிரியர்களில் ஒரு சிலர் வேறு மாகாணங்களில் கடமையாற்றுகின்றனர். நூற்றுக்கணக்கானோர் வடக்கு மாகாணத்தின் வேறு மாவட்டங்களில் கடமை யாற்றுகின்றனர்.

அவர்கள் அனைவரையும் கடமையாற்றும் கோட்டத்துக்கே சென்று தடுப்பூசி ஏற்றுமாறு பணிக்கப்பட்டுள்ளது. மாகாணத்துக்கு இடையிலான போக்குவரத்து இடைநிறுத்தப்பட்டுள்ள நிலையில், 

தடுப்பூசி ஏற்றுவதற்கு வேறு மாகாணத்துக்குச் செல்ல முடியாது. யாழ்பாணத்தில் தடுப்பூசி ஏற்றுமாறு கோரியபோது மறுக்கப்பட்டுள்ளது ஆசிரியர்களை அவர்களின் வதிவிடத்திலேயே தடுப்பூசி ஏற்ற ஒழுங்கு செய்திருந்தால் 

இவ்வாறான அலைச்சல்கள் ஏற்பட்டிருக்காது என்று கட்டிகாட்டப்பட்டுள்ளது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு