வடமாகாண ஆளுநர் பதவிக்காக கொழும்பில் சிலர் கடைவிரிப்பு! ஜனாதிபதியின் சிபார்சுக்காக நடையோ நடையாம்..

ஆசிரியர் - Editor I
வடமாகாண ஆளுநர் பதவிக்காக கொழும்பில் சிலர் கடைவிரிப்பு! ஜனாதிபதியின் சிபார்சுக்காக நடையோ நடையாம்..

அரச நிர்வாக சேவைகளில் அதிரடியான மாற்றங்களை செய்ய அரசு தீர்மானித்துள்ள நிலையில் இவ்வாரம் நிர்வாக சேவையின் உயர் பதவிகளில் அந்த மாற்றம் நடக்கும் என செய்திகள் வெளியாகியிருக்கும் நிலையில், 

வடக்கு ஆளுநர் பதவியிலும் மாற்றங்கள் ஏற்படலாம். என கூறப்படும் நிலையில் ஆளுநர் பதவியை பெறுவதற்காக பலர் கொழும்பில் கடைவிரித்திருப்பதாக கூறப்படுகின்றது. 

குறிப்பாக யாழ்ப்பாணத்திலிருந்தும் சிலர் ஆளுநர் பதவிபெறும் நோக்கில் கொழும்பு சென்றுள்ளதாகவும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஸவின் சிபார்சு பெறலாம். ஆனால் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஸவின் சிபார்சு பெறுவது

சிரமம் என கூறி ஜனாதிபதியிடம் சிபார்சு செய்யகூடிய செல்வாக்குள்ளவர்களின் வீட்டு, அலுவலக படிகளில் ஏறி இறங்குவதாகவும் கூறப்படுகின்றது. கொழும்பில் ஜனாதிபதியின் கடைக்கண் பார்வை கிடைக்காதா?

ஆளுநர் பதவி கிடைக்காதா? என அங்கலாய்க்கும் யாழ்ப்பாணத்தவர்களில் சிலர் ஒரு காலத்தில் தீவிர தமிழ்தேசிய வாதிகளாம்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு