யாழ்.நகரில் போதனா வைத்தியசாலைக்கு ஒதுக்கப்பட்ட ஒன்றரை ஏக்கர் காணியை இராணுவத்திடம் வழங்க சுகாதார அமைச்சு அழுத்தம்!

ஆசிரியர் - Editor I
யாழ்.நகரில் போதனா வைத்தியசாலைக்கு ஒதுக்கப்பட்ட ஒன்றரை ஏக்கர் காணியை இராணுவத்திடம் வழங்க சுகாதார அமைச்சு அழுத்தம்!

யாழ்.நகரில் போதனா வைத்தியசாலைக்காக ஒதுக்கப்பட்ட சுமார் ஒன்றரை ஏக்கர் காணியை இராணுவத்திற்கு வழங்க மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளை தமிழ்தேசிய மக்கள் முன்னணி கடுமையாக எதிர்த்துள்ளது. 

இது குறித்த அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் செ.கஜேந்திரன் நாடாளுமன்றில் சுட்டிக்காட்டியுள்ளார். இதன்போது மேலும் அவர் கூறுகையில், யாழ்.நகரில் போதனா வைத்தியசாலைக்காக ஒதுக்கப்பட்ட சுமார்

ஒன்றரை ஏக்கர் காணியை இராணுவத்திற்கு வழங்குமாறு சுகாதார அமைச்சின் செயலாளர் கடிதம் மூலம் அறிவுறுத்தல் வழங்கியிருக்கின்றார். ஆனால் அதனை அவ்வாறு வழங்க முடியாது. 

போதனா வைத்தியசாலையின் பயன்பாட்டுக்காக ஒதுக்கப்பட்ட காணியை அதற்கே பயன்படுத்தவேண்டும். எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு