உள்ளூராட்சி சபைகளில் ஒப்பந்த அல்லது அமைய அடிப்படையில் பணியாற்றுவோருக்கு நிரந்தர நியமனம்!

ஆசிரியர் - Editor I
உள்ளூராட்சி சபைகளில் ஒப்பந்த அல்லது அமைய அடிப்படையில் பணியாற்றுவோருக்கு நிரந்தர நியமனம்!

உள்ளூராட்சி மன்றங்களில் ஒப்பந்த மற்றும் அமைய அடிப்படையில் பணியாற்றும் ஊழியர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்குவதைற்கான நடவடிக்கைகளை அரசு துரிதப்படுத்தவுள்ளதாக பொதுச் சேவை,மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் ஜனக பண்டார தென்னக்கோன் தெரிவித்துள்ளார்.

ற்போது அமைய மற்றும்ஒப்பந்த அடிப்படையில் உள்ளூராட்சி அமைப்புகளில் பணிபுரியும் சுமார் 8 ஆயிரம் ஊழியர்களின் நிரந்தர நியமனத்தை விரைவுபடுத்துமாறு தனக்கும் பிரதமருக்கும் இடையிலான கலந்துரையாடலின்போது பிரதமர் அறிவுறுத்தினார் என அமைச்சர் கூறினார்.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ நிதியமைச்சராக அடுத்த அமைச்சரவைக்கூட்டத்தில் முன்மொழிவை முன்வைப்பார் என்றும் அமைச்சர் ஜனக பண்டார தென்னக்கோன் குறிப்பிட்டார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு