யாழ்.மாவட்ட செயலகம் முன்பாக உள்ள பழைய கச்சோி கட்டிடத்தை வெளிநாட்டுக்கு விற்கும் திட்டம் இல்லை!

ஆசிரியர் - Editor I
யாழ்.மாவட்ட செயலகம் முன்பாக உள்ள பழைய கச்சோி கட்டிடத்தை வெளிநாட்டுக்கு விற்கும் திட்டம் இல்லை!

யாழ்.மாவட்ட செயலகத்திற்கு முன்பாக உள்ள பழைய கச்சோி கட்டிடத்தை வெளிநாட்டுக்கு விற்பனை செய்யும் திட்டம் இல்லை. என பிரதமரின் மீள்குடியேற்ற செயற்றிட்டத்திற்கான வடகிழக்கு மாகாண அதிகாாரி கீதநாத் காசிலிங்கம் கூறியுள்ளார். 

குறித்த இடத்தை சீனாவிற்கு விற்பனை செய்வதற்கான நடவடிக்கை இடம்பெறுவதாக அண்மையில் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீதரன் குற்றச்சாட்டு ஒன்றினை முன்வைத்திருந்தார். மேலும் இதன் நடவடிக்கையின் ஓர் அங்கமாகவே 

அமைச்சர் நாமல் ராஜபக்ஷ யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டிருந்தார் என்றும் அவர் கூறியிருந்தார். இந்நிலையிலேயே பிரதமரின் மீள்குடியேற்ற செயற்றிட்டத்திற்கான வடக்கு, கிழக்கு மாகாணத்திற்கான அதிகாரி கீதனாத் காசிலிங்கம் மேற்கண்டவாறு

கூறியிருக்கின்றார். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு