யாழ்ப்பாணம் - நாரந்தனை கிராமத்தின் ஒரு பகுதி இன்று அதிகாலை 6 மணி முதல் முடக்கம்! இராணுவ தளபதி அறிவிப்பு..

ஆசிரியர் - Editor I
யாழ்ப்பாணம் - நாரந்தனை கிராமத்தின் ஒரு பகுதி இன்று அதிகாலை 6 மணி முதல் முடக்கம்! இராணுவ தளபதி அறிவிப்பு..

நாட்டில் இன்று அதிகாலை 6 மணி தொடக்கம் அமுலுக்குவரும் வகையில் 3 மாவட்டங்களில் 4 கிராமசேவகர் பிரிவுகள் முடக்கப்படுவதாக இராணுவ தளபதியும், தேசிய கொவிட் தடுப்பு செயலணியின் தலைவருமான ஜெனரல் சவேந்திர சில்வா அறிவித்திருக்கின்றார். 

இதன்படி முடக்கப்படும் பகுதிகளாவன, 

யாழ்.மாவட்டம் - ஊர்காவற்றுறை பொலிஸ் பிரிவு - நாரந்தனை வடமேல் கிராம சேவகர் பிரிவு,  மாத்தறை மாவட்டம் - மாத்தறை பொலிஸ் பிரிவு - உயனவத்த, உயனவத்த வடக்கு கிராம சேவகர் பிரிவுகள்,  

களுத்துறை மாவட்டம் - தொடாங்கொட பொலிஸ் பிரிவு - பூஹபுகொட கிழக்கு கிராம சேவகர் பிரிவின் மலபடவத்த இதேவேளை மட்டக்களப்பு மாவட்டத்தின் ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஏறாவூர் 02 கிராம சேவகர் பிரிவில்

அமுல்படுத்தப்பட்டிருந்த தனிமைப்படுத்தல் உத்தரவு இன்று அதிகாலை தளர்த்தப்பட்டது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு