கொண்டாட்டங்கள், கழியாட்டங்கள், ஒன்றுகூடல்கள் நடத்த தடை! மீறுவோர் கைது, பொலிஸ் பேச்சாளர் எச்சரிக்கை..

ஆசிரியர் - Editor I
கொண்டாட்டங்கள், கழியாட்டங்கள், ஒன்றுகூடல்கள் நடத்த தடை! மீறுவோர் கைது, பொலிஸ் பேச்சாளர் எச்சரிக்கை..

நாடு முழுவதும் பயணத்தடை தளர்த்தப்பட்டிருக்கும் நிலையில் கொண்டாட்டங்கள், களியாட்டங்கள், ஒன்றுகூடல்கள் நடத்துவதற்கு விதிக்கப்பட்ட தடை தொடர்ந்தும் அமுலில் இருக்கும் என கூறியிருக்கும் பொலிஸ் பேச்சாளர், பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண, 

தடையை மீறுவோர் கைது செய்யப்பட்டு சட்டநடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பொலிஸ் பேச்சாளர் எச்சரிக்கை விடுத்துள்ளார். மேலும் சில தொழில் நிறுவனங்களைத் திறப்பதற்கான அனுமதி மறுக்கப்பட்டுள்ளன.

திறப்பதற்கு அனுமதி பெற்றுள்ள தொழில் நிலையங்கள் மற்றும் சேவை நிலையங்களில் சமூக இடைவெளி முறையாக பின்பற்றப்பட வேண்டும். இது தொடர்பில் பொலிஸார் தொடர்ந்தும் கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர் என, 

பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பதில் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மாஅதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார். போக்குவரத்து கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ள காலப்பகுதிகளில், கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்காக 

சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் வெளியிடப்பட்டுள்ள சுற்று நிரூபம் மற்றும் சுகாதார ஒழுங்குவிதிகள் என்பவற்றுக்கு அமையவே செயற்பட வேண்டும்.இந்நிலையில் பொது போக்குவரத்தில் ஈடுபடுபவர்கள் 

உரிய விதிமுறைகளை முறையாக பின்பற்றுவதில்லை என்று தெரியவந்துள்ளது.இதன்போது பொது போக்குவரத்து நடவடிக்கையில் ஈடுபடும் வாகனங்களின் சாரதிகள், சாரதி உதவியாளர்கள் மற்றும் வாகன நடத்துனர்கள் 

அது தொடர்பில் கண்காணிக்க வேண்டும். கொரோனா சட்டவிதிகளை வாகனங்களுக்குள்ளும் பின்பற்ற கவனம் செலுத்த வேண்டும் என்றார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு