பயணக் கட்டுப்பாடு தீவிரமாக்கப்படும்..! மக்களின் அசண்டையீனத்தைசே அவதானிக்க முடிகிறது, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் எச்சரிக்கை..

ஆசிரியர் - Editor I
பயணக் கட்டுப்பாடு தீவிரமாக்கப்படும்..! மக்களின் அசண்டையீனத்தைசே அவதானிக்க முடிகிறது, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் எச்சரிக்கை..

நாட்டில் கொரோனா தொற்றாளர்கள் எண்ணிக்கை அதிகரிக்குமானால் பயணக் கட்டுப்பாடுகள் தீவிரமாகும் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்திய நிபுணர் அசேல குணவர்த்தன கூறியிருக்கின்றார். 

ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போது அவர் இதனை தெரிவித்தார். இதன்போது மேலும் அவர் கூறுகையில், தற்போது நாள் ஒன்றுக்கு 2 ஆயிரம் முதல் 2 ஆயிரத்து 200 வரையிலான கொவிட் தொற்றாளர்கள் பதிவாகின்றனர். 

இதன் காரணமாக பயணக் கட்டுப்பாட்டை கடுமையாக கடைப்பிடிக்க வேண்டும். நாம் கடந்த இரண்டு மூன்று நாட்களில் அவதானித்ததற்கு அமைய மக்கள் சுகாதார வழிமுறைகளை மீறி செயற்படுவதை அவதானிக்க முடிந்தது. 

இவ்வாறு நீடித்தால் நோயாளர்கள் மீண்டும் அதிகரிக்கக் கூடும். பின்னர் கடுமையான பயணக் கட்டுப்பாட்டினை விதிக்க வேண்டி ஏற்படும் என்றார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு