யாழ்ப்பாணம், அனுராதபுரம் சிறைகளில் தடுத்துவைக்கப்பட்டிருந்த 16 முன்னாள் போராளிகள் உட்பட 93 பேர் ஜனாதிபதியின் பொதுமன்னிப்பில் விடுதலை!

ஆசிரியர் - Editor I
யாழ்ப்பாணம், அனுராதபுரம் சிறைகளில் தடுத்துவைக்கப்பட்டிருந்த 16 முன்னாள் போராளிகள் உட்பட 93 பேர் ஜனாதிபதியின் பொதுமன்னிப்பில் விடுதலை!

தமிழ் அரசியல் கைதிகள் 16 பேர் உட்பட 93 கைதிகளுக்கு ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்கிய அடிப்படையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

மேற்படி தகவலை சிறைச்சாலைகள் ஊடக பேச்சாளர் சந்தன எக்கநாயக்க குறிப்பிட்டுள்ளார். மேலும் பொதுமன்னிப்பு பெற்றுள்ள 93 போில் 16 பேர் முன்னாள் போராளிகளாவர், 

மிகுதி 77 பேரும் சிறு குற்றங்களுக்காக தடுத்துவைக்கப்பட்டிருந்தனர் எனவும் கூறியுள்ளதுடன், 16 முன்னாள் போராளிகளில் 15 பேர் அனுராதபுரம் சிறையிலிருந்தும், 

ஒருவர் யாழ்ப்பாணம் சிறையிலிருந்தும் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் ஊடக பேச்சாளர் மேலும் கூறியிருக்கின்றார். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு