நாட்டு மக்களுக்கு பொலிஸார் விடுத்துள்ள எச்சரிக்கை! 10 ஆயிரம் பொலிஸார் கண்காணிப்பு பணிகளில்..

ஆசிரியர் - Editor I
நாட்டு மக்களுக்கு பொலிஸார் விடுத்துள்ள எச்சரிக்கை! 10 ஆயிரம் பொலிஸார் கண்காணிப்பு பணிகளில்..

நாட்டில் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டிருக்கும் சுகாதார வழிகாட்டுதல்களை மீறுவோர் மீது கடுமையான சட்டநடவடிக்கை எடுக்கப்படும். என பொலிஸ் பேச்சாளர், பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண கூறியிருக்கின்றார். 

இது குறித்து மேலும் அவர் கூறியுள்ளதாவது, 

சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வழங்கிய சுகாதார வழிகாட்டுதல்களை பொதுமக்கள் கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும். புதிய சுகாதார வழிகாட்டுதல்கள் இன்று (திங்கட்கிழமை) முதல் ஜூலை 5 வரை அமுலில் இருக்கும் என்றும் 

இதனை மேற்பவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார். இதேவேளை இன்று முதல் மேல் மாகாணம் முழுவதும் 37 நிரந்தர வீதித் தடைகள் உட்பட 700 வீதித் தடைகள் அமைக்கப்படும் என அஜித் ரோஹண தெரிவித்தார்.

பொலிஸ் உடையிலும் சிவில் உடையிலும் சுமார் 10,000 அதிகாரிகள் கடமையில் ஈடுபடுத்தப்படுவார்கள் என்றும் மோட்டார் சைக்கிள் ரோந்துப் பணிகளும் இடம்பெறும் என அஜித் ரோஹண தெரிவித்தார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு