நடிகையின் பாலியல் புகார்!! -அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் மணிகண்டன் கைது-

ஆசிரியர் - Editor II
நடிகையின் பாலியல் புகார்!! -அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் மணிகண்டன் கைது-

நடிகை சாந்தினி கொடுத்த பாலியல் முறைப்பாட்டினை அடுத்து அ.தி.மு.க வின் முன்னாள் அமைச்சர் மணிகண்டனை பொலிஸார் இன்று ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர்.

நாடோடிகள் சினிமா படத்தில் நடித்த சென்னையை சேர்ந்த நடிகை சாந்தினி; சென்னை பொலிஸ் அலுவலகத்தில் அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது பாலியல் முறைப்பாட்டை பதிவு செய்தார். 

இந்த நிலையில் மணிகண்டன் முன் பிணை கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இருப்பினும் அந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது. 

இந்நிலையில், நடிகை சாந்தினி அளித்த பாலியல் புகாரில் தேடப்பட்டு வந்த அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டனை பொலிஸார் இன்று கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 


காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு