நாட்டு மக்களுக்கு உண்மையை கூறிய ஜனாதிபதி! 14ம் திகதி பயணத்தடை நீக்கப்படாமைக்கு காரணம் இதுதானாம்..

ஆசிரியர் - Editor I
நாட்டு மக்களுக்கு உண்மையை கூறிய ஜனாதிபதி! 14ம் திகதி பயணத்தடை நீக்கப்படாமைக்கு காரணம் இதுதானாம்..

நாட்டில் தற்போதும் அமுலில் உள்ள பயணக்கட்டுப்பாடு 14ம் திகதி தளர்த்தப்படவிருந்தபோதும் அது தளர்த்தப்படாமல் 21ம் திகதிவரை நீடிக்கப்படுவதற்கு காரணம் மிக தவறான தகவல்களே என ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஸ விளக்கியுள்ளார். 

இம்மாதம் 11ஆம் திகதியன்று, 101 மரணங்கள் பதிவானதாகக் கிடைக்கப்பெற்ற தரவுகளின் அடிப்படையிலேயே, ஜூன் 21 வரை பயணக் கட்டுப்பாடுகளை நீடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதன் பின்னர், குறித்த மரணங்கள் ஏற்பட்டுள்ள விதம் பற்றி 

சுகாதார மற்றும் புலனாய்வுத் துறையின் ஊடாக மீண்டும் விரிவாக ஆராயப்பட்டு பெற்றுக்கொள்ளப்பட்ட தரவுகள் குறித்து, ஜனாதிபதி அவர்கள் விரிவாக விளக்கினார். இதன்போது, சில மரணங்கள் பெப்ரவரி 06முதல் ஜூன் 11ஆம் திகதி வரையான

04 மாதக் காலப்பகுதியில் பதிவாகி, மரணச் சான்றிதழ்களும் வழங்கப்பட்டிருந்தமை தெரியவந்துள்ளது. சில மரணங்கள் பற்றிய தகவல்கள், இரண்டு முறை பதிவிடப்பட்டிருந்தமையும் கண்டறியப்பட்டுள்ளது. 

ஜூன் 11ஆம் திகதி இடம்பெற்ற மரணங்களின் எண்ணிக்கை, 15 மட்டுமே ஆகும். இது தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விரிவான விசாரணைகளின் போது, 101 மரணங்கள் அன்றைய தினம் பதிவாகவில்லை என்பது தெரியவந்ததாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

அதனால், தரவுகளை வெளியிடும் போது சரியானதாகவும் இற்றைப்படுத்தப்பட்டதாகவும் இருப்பது, தீர்மானங்களை மேற்கொள்வதற்கு அவசியமாகுமென்றும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு