கொழும்பில் பதுங்கியிருந்த வாள்வெட்டுடன் தொடர்புடைய மூவர் கைது!

ஆசிரியர் - Editor II
கொழும்பில் பதுங்கியிருந்த வாள்வெட்டுடன் தொடர்புடைய மூவர் கைது!

யாழ்ப்பாணத்தில் வாள்வெட்டு வன்முறைகளில் ஈடுபட்டு கொழும்பில் தலைமறைவாகியிருந்த ஆவா குழு உறுப்பினர்கள் மூவர் கைது செய்யப்பட்டு யாழ்ப்பாணத்துக்கு அழைத்துவரப்பட்டுள்ளதாக பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பொலிஸாரால் தேடப்பட்டு வந்த முஸ்லிம் இளைஞன்; உள்ளடங்களாக மூவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்கள் மூவரும் கொழும்பில் மறைந்திருப்பதாகக் கிடைத்த தகவலின் அடிப்படையில் யாழ்ப்பாணத்திலிருந்து சென்ற சிறப்பு பொலிஸ் குழுவே அவர்களைக் கைது செய்துள்ளது.

இந்நிலையில் சந்தேகநபர்கள் மூவரும் நேற்றிரவு(28) யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்துக்கு அழைத்துவரப்பட்டனர்.

இந்நிலையில் அவர்களிடம் தீவிர விசாரணைகள் இடம் பெற்றுவருவதாகவும் அவர்களுடன் தொடர்புடைய மேலும் சிலர் கைது செய்யப்படவுள்ளதாகவும் பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு